Sunday 31 March 2013

முதல் காதல் ... காதலி




சட்டென்று உன்னை அடையாளம் காட்டியது... கனத்த பேருந்து நெரிசல் சப்ததிற்க்கிடையில்
 கேட்ட உன் சிரிப்பொலி ... நரம்பில் ரத்தம் வேகத்தை கூட்டி புத்திக்கு எதையோ உணர்த்தியது. அவள் தான் அவள் என்று. அனிச்சையாய் குரல் வந்த திசை நோக்கிய கண்கள் நிலைகுத்தி நின்ற தருணம் .உன் பார்வை என் விழியில் மோதி திரும்பத் தெரியாமல் தவித்து நின்றது. அவளே அவளே தான்.... சில தெய்வ கணங்கள் நீ உன்னை மறந்தாய். நான் என்னை மறந்து உன்னை நினைத்த பொழுதுகளில் நீ உன் தோழியின் முதுகிற்கு பின்னே உன் உருவத்தை மறைத்தாய். 

அதுவே அதுவே தான் நீ... நீயே தான் அது என்று மெய்ப்பித்து சொன்னது.

மதியம் தாண்டிய வகுப்பறை நேரம் ஒட்டுக் கூரையின் விரிசலுக்கிடையில் உனைத்தேடி விழும் அந்த ஒற்றை ஒளிக்கிற்றையில்..தேவதை என்றே உனை நினைக்க கூடும்..உனைத் தேடியே பார்வைகள் அலைமோதும்... நீயோ என் பார்வையின் தேடல் தெரிந்தே குனிந்து ஒளிந்து கொள்வாய்....அடியே உருவங்கள் மாறிப்போனது இருந்து இன்றும் நீ அந்த ஏழாம் வகுப்பு அங்கையற்கண்ணி தான்.