Friday 25 January 2013


இன்று. நாளை நாளை மறுநாள் உயிர்த்தெழுவோம் நம்பிக்கையில் இறந்து போனான் கலியுக கடவுள். # பாவி பசங்க அதுக்குள்ள குழிக்குமேலே ப்ளாட்டும் போட்டு , நடுவுல ரோடும் போட்டு வித்தும் புட்டாங்க சுடுகாட்ட.

என் ஆயுள் ரேகை திசைமாறி..... உன் திசை காட்டியே நிற்பது தான்... காதல் தேவன் நம் காதலுக்கு தந்த வரமும்.. எனக்கு தந்த சாபமும்.

ஓருபார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள் ஏனோ ? தர்க்கமோ , தத்துவமோ பேசவரவில்லை. # அபலை சிறுமி உதவி கேட்க்கும் தருணங்களில்.

பிரபஞ்சத்தின் கடைசிமனிதனும் நான்தானோ ? உன் விரல் கோர்த்து நடை பழகிய வீதியில்..... நான் மட்டும் தனிமையில் நடக்கையில். மனம் சொல்லியது ?

ஓரு ஜோடி சேர்ந்தது ? ஓரு ஜோடி தொலைந்தது ... திருமண வீட்டில் ... # செருப்பை யாருப்பா மா(லவ)ட்டிக்கிட்டு போனது ?

இருட்டறை சட்டங்கள்


கையூட்டு பெற்று கைதானவன் .... கையூட்டு கொடுத்து விடுதலையாகிறான். # வாழ்க வறியவர்களுக்கேயான நடைமுறைச் சட்டங்கள்.

சுமைதாங்கி


யார் ஏற்றி விட்ட சிலுவையோ ? இன்னும் சுமக்கிறாள். கேள்விக்குறியாய் வளைந்த முதுகுடன் கூன்காரக் கிழவி.