Sunday 27 October 2013

மெத்த கற்ற அறிவியலால்..
விண்கலம் ஓசோனை உடைத்து
ஏதோ கிரகத்தில்
ஏதேதோ ஆய்ந்து மேய்ந்தது.

இலக்கோடு ஏவுகணை கண்டம் விட்டு
கண்டம் தாண்டி
மனிதவதம் புரிந்தே
ஓய்வெடுத்தது.

நானோ ? ஏழை
மனிதம் கற்றவன்.
என் பிழைப்போ
மூச்சடக்கி
அடைப்பெடுப்பது
கழிவு நீர் குழாயில்.

கனவான்களே ஆயுதமேதுமிருந்தால் சொல்லுங்கள்.
கொஞ்சமேனும் சுவாசிக்க வேண்டும்
உடல் வளர்த்து
உயிர் வாழ.