Wednesday 6 November 2013

பாவம் அவர்களும் கடவுள்கள் தானே.

உன் உடல்
உன்னுயிர் பிரிந்த வேளையில்
புத்தனும், ஏசுவும்
அல்லாவும் மரித்தேதான் போனார்கள்.
பாவம் அவர்கள் கடவுள்கள் தானே.

மன்னித்து விடு எங்கள் தாயே ? ( இசைப் பிரியா )

அன்று பாலச் சந்திரனுக்காய் அழுது தேம்பிய
அதே விழிகள்
இன்று உனக்காய் அழுகிறது.

ஒன்று கேள் ?
தமிழனாய் பிறந்ததால்
இவ்வேதனை என்றால்,
ஒருபோதும் அத்தவற்றை செய்யாதே.

மன்னித்து விடு எங்கள் தாயே ?