Wednesday 23 May 2012

ஓரு ஈழ குழந்தைக்கு பதில் கடிதம் ...


எங்கே இருக்கிறாய் என் நட்பின் இதயமே..

யாழ் வீதிகளில் நாம் கரம் கோர்த்து நடந்ததை மறவாயோ ?

நலம் என்று சொல்ல எதுவுமில்லை ... 

இருக்கிறேன் என்று சொல்ல உயிர் இருக்கிறது . 

உன் குரல் கேட்டு வந்த நேரத்தில் ...

குண்டுகள் என்னுடல் சிதைத்ததை அறிவாயோ ?

முள்வேலிக்குள் இருக்கிறேன் ..

வருவேன் .. தம்பி வந்தால் .. 

மற்றபடி....

நலம் அறிய ஆவல் தோழியோ .

No comments:

Post a Comment