Wednesday 23 May 2012

தன்னம்பிக்கையின் கதை ...

மலர்ந்தால் உதிர்வேன் என்று .
தெரிந்தும் மலர்ந்தேன்.
பிறந்தால் இறந்து விடுவேன் என்று.
தெரிந்தும் பிறந்தேன்.

ஆகஸ்ட் 15

வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் வாங்கி இந்திக்காரனிடம் அடகு வைத்த தினம் இன்று...நாம் தமிழர்கள்..... நமக்கென்று விடியட்டும் ஒரு தேசம்..

 சொல்லாமல் வந்தவள், சொல்லாமல் செல்வது முறையோ ?

காலம் உனது ... 

நம்பிக்கையை விதைத்தவள் நீ தானே ?

வா நமக்கென ஓரு நந்தவனம் செய்வோம்..

நம் தலைமுறை அங்கே தழைக்கட்டும்.

ஐயம் மற கண்மணியே..

பசித்த வேளை உணவு..

பகட்டான வாழ்க்கைக்கு.

வசதி மறுத்தாலும்..

பாவமில்லா வாழ்க்கை வாழப் பழகுவோம்.

கரம் கொடு .. கரைச்சேர்ப்பேன் .

ஓரு ஈழ குழந்தைக்கு பதில் கடிதம் ...


எங்கே இருக்கிறாய் என் நட்பின் இதயமே..

யாழ் வீதிகளில் நாம் கரம் கோர்த்து நடந்ததை மறவாயோ ?

நலம் என்று சொல்ல எதுவுமில்லை ... 

இருக்கிறேன் என்று சொல்ல உயிர் இருக்கிறது . 

உன் குரல் கேட்டு வந்த நேரத்தில் ...

குண்டுகள் என்னுடல் சிதைத்ததை அறிவாயோ ?

முள்வேலிக்குள் இருக்கிறேன் ..

வருவேன் .. தம்பி வந்தால் .. 

மற்றபடி....

நலம் அறிய ஆவல் தோழியோ .

புறக்கணிப்பு

தோல்வியை விட புறக்கணிப்பின் வலி அதிகமாக தான் இருக்கிறது. நான் ஒன்றும் இதயம் இல்லாதவன் இல்லை

வஞ்சனை ...

எதிர்பார்த்த ஓன்று எதிர்பார்த்த போது விட்டு நழுவும் போது .. தைரியமான மனதும் கூடவே சேர்த்து நழுவுகிறது. மனமே வஞ்சனை செய்யாதே.!!!

விமர்சனம் .

என்று உன்மீது விமர்சனங்கள் வைக்க படுகிறதோ அன்று பிறர் உன்னை கவனிக்க தொடங்கிவிட்டனர் என்று பொருள். விமர்சனங்களை ஏற்று கொள்ள பழகுங்கள்

நான் ...

அவமானங்கள் ஓன்றும் புதிதில்லை. இறைவன் ஒரே நோக்கத்திற்காக பலரை படைப்பதில்லையாம், ஓரு வேளை நான் .....??? அவமானங்களை பழகு. த்ரோகங்களில் இருந்து கற்றுக்கொள். ( எனக்கே நான் சொல்லும் பிராண மந்திரம் )

அடையாளம்

நீ எதுவாகவும் என்னை நினைத்துக்கொள். நீ மாற்ற நினைக்கும் எந்த குணம் மாறினாலும் நான் நானாக இருப்பதில்லை . சுய அடையாளங்கள் இழப்பத(விற்பத)ற்கில்லை.